Skip to main content

27ஆம் விருட்சம் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி...

அழகியசிங்கர்


விருட்சம் சந்திப்பின் 26வது கூட்டத்திற்கு எல்லோரும் வந்திருந்து கூட்டத்தைச் சிறப்பு செய்தார்கள்.  அவர்கள் எல்லோருக்கும் என் நன்றி.  இக் கூட்டத்தின் முக்கிய நோக்கம். நம்மிடையே பிரபலமான இலக்கிய உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றி அவருடன் நெருங்கி பழகியவர்கள் அல்லது அவர்களுடைய படைப்புகளைப் படித்து அது குறித்து சிலாகித்துப் பேசுபவர்களின் கூட்டம் இது.  முதல் கூட்டம் தி ஜானகிராமனைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் சிறப்பாக உரை நிகழ்ந்தினார்.  அதேபோல் இந்த மாதம் 15ஆம் தேதி பெருந்தேவி புதுமைப்பித்தனின் கதைகளைக் குறித்து உரை நிகழ்ந்த உள்ளார்.  புதுமைப்பித்தன் போல் கநாசு, மௌனி, செல்லப்பா, அசோகமித்திரன் என்று பல எழுத்தாளர்களைப் பற்றி பலர் பேச உள்ளார்கள்.  நீங்கள் எல்லோரும் வந்திருந்து கூட்டத்தை சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இதோ கூட்டத்திற்கான அழைப்பிதழ்.  இதை எல்லோரும் உங்கள் வலைதளங்களில் மற்றவர்களுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

Comments