Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 13


அழகியசிங்கர்


        அரும்புகள்

ராமலக்ஷ்மி



என்றைக்கு
எப்போது வருமென
எப்படியோ தெரிந்து
வைத்திருக்கின்றன
அத்தனைக் குஞசு மீன்களும்

அன்னையருக்குத் தெரியாமல்
நடுநிசியில் நழுவிக்
குளம் நடுவே குழுமிக் காத்திருக்க

தொட்டுப் பிடித்து விளையாட
மெல்ல மிதந்து
உள்ளே வருகிறது
பிள்ளைப் பிறை நிலா.



நன்றி : இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி - கவிதைகள் - விலை : ரூ.80 - முதல் பதிப்பு : ஜனவரி 2014 - வெளியீடு : அகநாழிகை பதிப்பகம், எண் 33, மண்டபம் தெரு, மதுராந்தகம் 603 306 - தொலைபேசி : 999 454 1010 

Comments