Skip to main content

கழுதைகளின் உலகம்.......

சா இளையராஜா 

 



பூமி
முழுவதும்
பல பூக்கள்
பூத்துக்
குலுங்கினாலும்
அவற்றில்
ஒரு பூக்கூட
அழகான
கழுதைகளாகிய
எங்கள் நிறத்தில்
இல்லை.............

பின் குறிப்பு :

கழுதைகளின் உலகம் என்ற தலைப்பில்  சா இளையராஜா என்பவரின் கவிதையை விருட்சம் 99வது இதழில் வெளியிட்டுள்ளேன்.  ஞானக்கூத்தன் இவருடைய கவிதைகளைக் கொடுத்து உதவி உள்ளார்.  கழுதைகளை அடிப்படையாகக் கொண்டு பல கவிதைகள் எழுதி உள்ளார் இளையராஜா.  நான் யோசிப்பதுண்டு ஒரு புத்தகத்தில் கழுதையைப் பற்றியே எல்லாக் கவிதைகளும் படிப்பது எப்படி இருக்கும் என்று.  ஒன்றிரண்டு கவிதைகள் என்றால் சரி?  ஆனால் எல்லாமே அப்படியே இருந்தால்......

Comments