Skip to main content

ஒரு பாடம்

நவம்பர் 1970   -  கசடதபற இரண்டாவது இதழ்


தி.சோ.வேணுகோபாலன்


"போடா நாயே"
வார்த்தை 'வெள்' என்று வெடித்தது
இதயம் படபடக்க
கண்கள் சிவந்தன.
அறிவில் குறுகுறுக்கிறது
ஒரு படம்

தொழுநோய்ப் பிச்சைக்காரனை
தன் வால் தூரிகையால்
நாய்
மனிதனாய்ச் சித்தரித்தது

Comments