Skip to main content

இலையின் இயல்பற்ற இதயம்


க.உதயகுமார்


நதிவழி நீந்தும்
இலைபோல்
லாவகம் வருவதில்லை
விதிவழி வற்றும் வாழ்வில்
ஓவியத்தின் கண்களென
நிலைகுத்தியே நிற்கிறது
துயர்
சன்னமாய் விரிசல் விட்டு
சுக்குநூறாய் உடைகிறது
கண்ணாடி மனசு

இலைகளுக்கு எப்படி
இவ்வளவு எளிதாக இருக்கிறது
தன்னை விடுவித்துக் கொண்டு
சுதந்திரமாய் சுற்றித் திரிய ?
மெலிதாய் விழவும்
ஒரு மழைக்குமுன்னதான காற்றில்
ஈரமாய் எழவும்
இலையின் இயல்பற்ற இதயத்தால்
முடிவதில்லை

பச்சை காய்ந்து
பழுப்பு மினுங்கும்
பருவத்தே
நானுமோர் இலையாவேன்
என்ற எதிர்பார்ப்பு இல்லாமலில்லை

Comments

எதிர்பார்ப்பை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...