Skip to main content

உதிர்ந்த கிடக்கின்றஇலை-




ரவிஉதயன்


உதிர்ந்த கிடக்கின்ற
இலையொன்றை எடுத்து
முகர்ந்தவாறே இது என்ன மரமென்று?
கல்யாணியண்ணன் கேட்டார்.
நிழலின் குளிர்ச்சியில்
நின்றுகொண்டிருந்த எனக்கும்
இலைமடங்கலின் வாசனைஅடிக்கிறது.
நெடுநெடுவென்று வளர்ந்துவிட்டது
அவரைப் போலவே
அவரது கேள்வி
என் அறியாமையின்மீது!
பெயர் தெரியாமரமென்கிறேன் அவரிடம்
அவரும் புன்னகைக்கிறார்.
அப்போது தான்
பெயர் தெரியா அம்மரத்தில்
பெயர் தெரியாப்பறவையொன்று
வந்தமர்ந்தது.

Comments

பறவையையும் ரசித்தேன்...