Skip to main content

ஒரு விதை போல



ரவிஉதயன்

துளிகள் அடர்ந்து
வானம் பெயர்ந்து விழுகிறது
மழை தாரைகள்
நிற்காது மண் முற்றத்தில் தாளமிசைக்கின்றன
தாளக்கிரமங்களை
செவியுற்றவாறே
ஒரு விதைபோல
வீழ்ந்து கிடக்கிறேன்
சரி பாதி
தொட்டிலில் உறங்கிக்கொண்டும்...
சவப்பெட்டியில் சரிந்துகொண்டும்...

Comments