Skip to main content

ழ 6வது இதழ் - பிப்ரவரி / மே 1979


தேவதச்சன்


மூன்று கவிதைகள்



வாழ்வு சாவெனத்தன்
வேசம் மாற்றிக் கொள்ளுமுன்
உன் சீட்டைக் காலிபண்ணு
நீ பாத்திரம் அது
பார்வையாளனெனத்
தலைகீழாய் நாடகம் மாறப்போகிறது.


மேகம் தெரியாத
மீனின் கோஷத்தை
ஓரத்தில்லை
இரண்டும் தெரிந்த
பறவையின் பாட்டை
ஏற்றிப்பார்.


விதையாய் தொடர
வேறுவழி உண்டோ
மரமாய் பெருகி
பழமாய் கனியாமல்

ம்
என்றும்
சோற்றால் பசியை
ஜெயிக்கணு மென்றால்
பசியால் சோற்றை
ஜெயீக்கணும் தான்.

2. பகலிலிருந்து
உதிர்ந்தவனுக்கு
பகலெல்லாம் துவக்கம்
பகல் தொறும் துவங்கும் என்கனம்
ஒரு வெளிறிய சந்தேகம்
இடையறாது மிதந்து தொங்கும்
பயமேகம்
இடையறாதுசிரித்தோடும்ஒடைப்புனலில்
பகலுக்கொரு
பார்வைச் சன்னல்


3. திறந்து கிடக்கிறது
வரம்
நீ விரும்புவதுன்
உடல் முழுவதும்
ஆகுக



Comments

அனைத்தும் அருமை... முக்கியமாக


ம்

வாழ்த்துக்கள்...