Skip to main content

A. Thiagarajan











மராத்திய மொழியில் ஹைக்கூ (2)


திருமதி சிரிஷ் பை அவர்களை அவரது சிவாஜி பார்க் இல்லத்தில் ஹைஜின் பூஜா மலுஷ்டே அவர்களுடன் ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தேன். 

பூஜாமலுஷ்டே விற்கு நன்றி - இந்த சந்திப்பிற்கும் , உரையாடலில் பல இடங்களில் பை அவர்களுக்காக  இக்விவலேன்ட் ஆங்கில வார்த்தைகளை உடனுக்கு உடன் எனக்குச் சொல்லியும் உதவியதற்கு. 

ஹைக்கூ என்பது கவிதை அல்ல ; அது ஒரு கவித்துவமான ஆச்சர்யப் படல் என்று ஆரம்பித்தார் சிரிஷ் பை. 
மூன்றுவரிப் பாடல்கள் எல்லாம் ஹைக்கூ ஆகி விட முடியாது. 
ஹைக்கூ ஒரு சிந்தனைத் துளியோ அல்லது ஒரு உணர்வு மட்டுமோ அல்ல.

ஆரம்பத்தில் இயற்கை பற்றி மட்டுமே எழுதி வந்தார். அவர் எழுத ஆரம்பித்த காலத்தில் ஹைக்கூ மராத்திய மொழியில் அறிமுகப்படாது இருந்தது. ஹைக்கூ வை காய்கூஸ் ( மராத்திய மொழியில் எதற்காக என்று பொருள் வரும் ஏளனத்தில் ) என்றும்,  இ ஸ் ஸா  என்ற மாபெரும் ஜப்பானிய ஹைஜீன் அவர்களை குஸ்ஸா ( கோபம் என்ற பொருளில்) என்றும் கேலி செய்து சந்தோஷப் பட்ட பெரிய மராத்திய கவிகளும் எழுத்தாளர்களும் சிரிஷ் பை அவர்களையும் என்ன எழுதுகிறாய் என்று ஏளனமாகக் கேட்டதுண்டு என்று நினைவு கூர்ந்தார் சிரிஷ் பை.

சிரிஷ் பை ஒரு பெரிய பெயர் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். பத்திரிகை ஆசிரியாராக வெகு காலம் பணி ஆற்றியவர். இவரது தந்தை ஒரு பெரிய பொதுநலவாதியாகவும், பத்திரிகையாளராகவும், பேச்சாளராகவும்,  கவியாகவும்,   மிகவும்  மதிக்கப்பட்ட பிரபலமாகவும் இருந்தார். ஜனாதிபதி பரிசு பெற்ற நீண்ட நாள் ஓடி பெயர் பெற்ற  ஷ்யாம்சி ஆச்சி என்ற படம் சிரிஷ் பையின் தந்தையார் தயாரித்ததே.

தந்தையின் வழி எழுத்துலகில் வந்த சிரிஷ் பை தனக்கு ஹைக்கூ மூலம் பெயரும் புகழும் வந்த போது
தந்தை இல்லாததை வருத்தத்துடன் நினைவு கூர்ந்தார்.

மற்ற கவிதைகள் எழுதுவதை தற்போது முற்றிலும் நிறுத்தி விட்டதாகவும் ஹைக்கூ மட்டுமே எழுதுவதாகவும் சொன்னார். 

ஜன்னலின் கதவில் அமர்ந்து கா கா என்று கரையும் அந்த சொற்களிலும் சோகம் இருப்பதை ஹைக்கூ காட்ட முடியும்.

ஒருவர் பூக்களை அவ்வளவு வேகமாகப் பறிக்கிறார் - அந்த வேகத்தில் ( வையலன்சில்) , பூக்களுடன் சில மொட்டுகளும் பறிக்கப் பட்டன. தற்போது நடக்கும் சிறு பெண்களின் கற்பழிப்பு தான் நினைவிற்கு வருகிறது. இதுவே ஹைக்கூ அல்லாமல் ஒரு கவிதையானால், இந்த விஷயத்தை வெகு ஓபனாகவே சொல்லியிருக்க முடியும் - என்கிறார் சிரிஷ் பை.

விஜய் டெண்டுல்கர் என்ற ஒரு பெரும் எழுத்தாளர் ஜப்பானிய ஹைக்கூ மொழிபெயர்ப்பு புத்தகம் ஒன்றை தனக்கு அன்பளித்ததே தனது ஹைக்கூ பயணத்தின் ஆரம்பமாக ஆனது. " அதை படித்து படித்து அதில் ஒரு பேரானந்தம் கண்டாதாகக் கூறுகிறார் பை. தானும் எழுத ஆசைப் பட்டு எழுத ஆரம்பித்தார். ஆரம்பத்தில் தான் எழுதியது எதுவும் ஹைகூவாகவே இல்லை என்று தனக்கே தெரிந்தது. கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பிறகு ஒரு நாள் தனியாக தோட்டத்தில் ஹைக்கூ எழுத வரவில்லையே என்று வருத்தத்தில் இருந்த போது, திடீரென அவரது முதல் ஹைக்கூ பிறந்தது என்கிறார் பை. மேலே சொன்ன காக்கை பற்றியதுவே அது. 

அதன் பின்னர் ஹைக்கூ தானாகவே சரளமாகவே வந்தது என்கிறார். சுபாவமாகவே எந்த ஒரு அதீத உழைப்பு, முயற்சி இன்றி வந்தது ஹைகூக்கள். 

ஹைக்கூ என்பது கஷ்டப்பட்டு "கம்போஸ்" செய்யப் படுவது இல்லை. சொல்லாட்சி மிகவும் முக்கியமானது. எந்த சொற்களை எவ்வாறு எங்கு பிரயோகம் செய்கிறோம் என்பது ஒரு ஹைகூவை ஆக்கவோ அழிக்கவோ கூடும். எவ்வாறு முடிப்பது என்பதும் ஹைகூவில் க்ரிடிகள் ஆனா விஷயம்.

ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள், பல விருதுகள், மராத்திய மாநிலத்தின் எல்லா இடங்களில் இருந்தும் ஹைக்கூ சொல்லவும், அது பற்றி பேசவும் முடிவில்லா அழைப்புகள். 

83 வயதை எட்டிய சிரிஷ் பை வெளியில் அதிகம் செல்வதில்லை; ஹைக்கூ மட்டுமே எழுதிகிறார்.

ஹைக்கூ எழுத விரும்பும் ஆர்வலர்கட்கு அவர் சொல்வது-

ஜப்பானிய ஹைக்கூ நிறைய படியுங்கள்- ஸ்டடி செய்யுங்கள்.
மீண்டும் மீண்டும் படியுங்கள்

சாதாரண கவிதைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று உணருங்கள்.
இது இல்லாமல் ஹைக்கூ என்பது என்ன என்று தெரிந்து கொள்ளாமலே போய்விடுவீர்கள்.வார்த்தைப் பிரயோகங்களை கவனியுங்கள். எழுத ஆரம்பியுங்கள்.அனாவசியமாக கூடுதலாக ஒரு வார்த்தை இல்லாமல் எழுதுங்கள். மீண்டும் எழுதுங்கள். எழுதிக்கொண்டே இருங்கள்.

இதோ சிரிஷ் பை எழுதிய  சில ஹைக்கூ - 

மாலை சூரியன் மஞ்சளில் தொலைந்த மஞ்சள் பட்டாம் பூச்சி, நான் குனிந்த பார்த்த பொது, நிழலில் தென்பட்டது. 

வேகமாகச் செல்லும் கார் ஒன்றின் கண்ணாடியில் ( விண்ட்ஸ் க்ரீனில் ) ஒரு சிறிய பட்டாம்பூச்சி  மெதுவாக உள்வந்து அமைதியாக உட்கார்ந்தது. 
 
யாருமில்லா இருள்
மழைத்துளிகள் நில்லாது
இலைகளில் தட்டிக்கொண்டிருக்கின்றன
 
ஓ! எவ்வளவு பனிமூட்டம் 
அவ்வளவு ஆழம் 
பள்ளத்தாக்கு அளவு 
 
காற்று கூட்டிச் செல்கிறது
காய்ந்த இலைகளையும் தூசியையும்  
உடன் ஒரு பட்டாம் பூச்சியையும்
 
லேசான தூறல்
கழுவப்படாமலே
இலை மேல் தூசி
 
தலை மேலே பட்டாம்பூச்சியின் சப்தம் அறியாமலே
இந்த ஆண் பூனை
சூரிய ஒளியில் சோம்பேறித்தனமாக படுத்துக் கொண்டிருக்கிறது.
 
( this is a tomcat ie a male domestic cat. Tomcat as a verb means pursue women promiscuously for sexual gratification.)
 
அடுத்து பூஜா மலுஷ்டே ....

Comments