Skip to main content

மிதக்கும் பல்லி

 

அந்த பல்லி
ஒவ்வொரு இடத்துக்கும்
ஒவ்வொரு ஒப்பனையில்
பறந்து சென்றது
செயற்கைகோளின் துணையுடன்.

அதை
மரப்பல்லி , காட்டுப்பல்லி,பறக்கும்பல்லி
என்றனர் சிலர்
அது பெண் பல்லி என்பது
மட்டும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

பல்லிக்கு இறக்கை கட்டினால்
பறவையாகிவிடுமா?
பல்லி வளருமா? யாராவது வளர்ப்பார்களா?
பல்லி இழந்த வால் என்னவாகும்?
என விவாதித்தனர் சிலர்.

பல்லி எதிர்காலத்தில் வளர்ந்து
டைனோசர் ஆகி விடுமா என்றஞ்சியோர்
‘நீ பல்லியே அல்ல - கொசுதான்’
என போதித்தனர் அதன் காதில்.

பல்லி இனம் அழிந்து
ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டனவே
எனக்கூறிக் கொண்டே அதன் தலையை
நசுக்க வந்தோரிடம்
தன் தலையை கழற்றிவிட்டு விட்டு

பிரபஞ்சபத்தில் மிதக்கத் தொடங்கியது பல்லி
•••




Comments