Skip to main content

காகிதத்தின் மீதுகடல்

 
 
 
சிறுமி காகிதத்தின் மீது
ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதில்
ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள்
ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதன் முகடுகளில்
ஏழு பஞ்சு மேகங்களை மிதக்கவிடுகிறாள்
ஏழு மேகங்கலிருந்து
சில மழை துளிகளை உதிர விடுகிறாள்

மழைத் துளிகள் விழுமிடத்தில்
ஒரு பூவின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதனடியில்
தன் பெயரை எழுதுகிறாள்
இனி அவளை காண்பதென்றால்
ஏழு கடல்  ஏழு மலைளைத் தாண்டி
பயணிக்க வேண்டியிருக்கும் நமக்கு

Comments

காகிதத்தின் மீது கடல்... பள்ளி கொள்கிறது கவிதை... வாழ்த்துக்கள் ரவி உதயன்...
மதி said…
அருமையான கவிதை .. முடிவில் அசத்தி விட்டீர்கள் ..
மிக அருமை.
Unknown said…
நல்லாயிருக்குங்க.
thaalum vanna pencilum eandhi vayathai izhanthu pinne poivida eakkam thantha kavithai