Skip to main content

மேன்மக்கள்

எல்லோரும் உடம்பின்

வியர்வை ஊற்றுக்

கண்களிலெல்லாம்

வாசனைத் திரவமூற்றி

காற்றில் போதையேற்றி

சற்றே முகமெங்கும்

வெள்ளை அடித்து

வீதிக்கு வருகிறார்கள்.

அவர்களின் ஒரு கையில்

பெரிய பூதக் கண்ணாடியும்

இன்னொரு கையில்

தார் சட்டியும்.

பூதக்கண்ணாடியால்

ஒவ்வொருவரையும்

கூர்ந்து பார்த்துவிட்டு

அவர்கள் முகத்தில்

சிறிது கரும்புள்ளி

தென்பட்டால் கூட

உடனடியாக அவருடைய

உருவம் வரைந்து

அதில் தார் பூசி

எல்லோருக்கும் காட்டி

இளித்து இன்பமடையும்

மக்கள்.

Comments