Skip to main content


கவிஞனென்றானதெல்லாம்

அறிந்துகொள்ள ஆசைப்பட்டுத்தான்

அறிந்து கொண்டது
தெரிந்துகொள்ளத் தலைப்பட்டுத்தான்

தெரிந்துகொண்டது
புரிந்துகொள்ள பிரயாசைப்பட்டுத்தான்

புரிந்துகொண்டது
அறிந்தது தெரிந்தது புரிந்தது

அத்தனையும் சேரத்தான் கவிஞனென்றானதே
கவிஞனென்றானதெல்லாம்

நன்றோ தீதோ

கர்மவினைதான் போடி


அமர்


மெய்ப்பு பார்ப்பவனில்லை
புஸ்தக மதிப்புரையாளனில்லை
பத்திரிகையாளன்இல்லை
கருத்துரையாளன்இல்லை
பேச்சாளன் அல்லன்
பத்தி எழுத்தாளன்அல்லன்
கட்டுரையாளனோ விமர்சகனோ கூட

அல்லன்
சிறுகதை ஆசிரியனோ புதின ஆசிரியனோ கூட

அல்லன்
கவிஞன்

அவனுக்காக

காத்திருக்கின்றன கவிதைகள்

Comments

சாகாவரத்துடன் சக்தி மிகுந்த ஜாம்பவான் விக்ரமாதித்யனின் கவிதைகளுக்குள் இருந்து மிரட்டுகிறான்.
குமரி எஸ். நீலகண்டன்