Skip to main content

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்......26.




பூனைக் கவிதைகள்


செல்வராஜ் ஜெகதீசன்

01

கடைசியாய்

காரொன்றில்

அடிபட்டு இறக்குமுன்

அந்தக் கறுப்புப் பூனை

முழித்தது யார்

முகத்திலோ?

o

02

திருடனொருவனை

காட்டிக்கொடுத்த

அடுத்த வீட்டுத்

திருட்டுப் பூனைக்கு

அதற்குப் பிறகும்

அதே பெயர்தான்.

O

03

இருந்தும்

கடந்தும்

போயின

எத்தனையோ.

இன்னும் பல

எங்கோ

எப்படியோ

இருந்து

கடக்க.

O

Comments