Skip to main content

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......20





மீனுவும் பூனையும்

குமரி எஸ்.நீலகண்டன்

மீனு அவளது அம்மாவிடம்

அநியாயத்திற்கு

கோபப்படுவாள்.

அம்மாவைப் பற்றியே

அம்மாவைப்

பிடிக்காதவர்களிடம்

ஆயிரம் குசும்பு

சொல்லி இருக்கிறாள்

கணவன் ஏதாவது

சொன்னால் பாம்பாய்

படமெடுப்பாள்

மாமியாரிடம்

மணிக் கணக்கில்

சண்டை போடுவாள்

அவளை யாரும்

குத்தம் சொன்னால்

கொத்துகிற பாம்பாய்

விஷத்தை பீய்ச்சுவாள்

ஆனால் மீனு அவளது

பூனையுடன் மட்டும்

மிகுந்த அன்பு காட்டுவாள்.

அதற்கு நேரம் தவறாமல்

பால் கொடுப்பாள்

அதன் பஞ்சு போன்ற

முதுகைத் தடவிக்

கொடுப்பாள். அதனை

ஷாம்பு போட்டு

நாள் தவறாமல்

குளிப்பாட்டுவாள்.

பூனையோடு கொஞ்சியும்

விளையாடுவாள் பூனையின்

காலில் ஏற்பட்ட

சிறிய காயத்திற்காக

அண்டை அயலாரிடம்

ஐயோ பாவம்

ஐயோ பாவமென

துக்கித்து துவண்டு

போனாள்.

எல்லோரும்

அந்த பூனையை

பதுங்கி பதுங்கி

ஒரு திருட்டுப் பார்வையுடன்

பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்




Comments

பத்மா said…
பூனைபோல் மீனு