Skip to main content

உங்களுடன் ஒரு வார்த்தை

நண்பர்களே,

இத்தனை நாட்களாக நான் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. என் கணினி ஒத்துழைக்கவில்லை. எதிர்பாராதவிதமாய் ஏற்பட்ட விபத்தைச் சரிசெய்ய சரியாய் 2 வாரங்கள் ஓடிவிட்டன. நேற்றுவரை முரசு அஞ்சல் கிடைக்கவில்லை. இன்று ஒரு நண்பரின் புண்ணியத்தால் முரசு அஞ்சல் கிடைத்துவிட்டது. இந்த இரண்டுவாரங்களில் ஒரு கூட்டம் நடத்தினேன். அது குறித்து தகவல் தருவது அவசியம். சில புகைப்படங்களை இணைக்கவும் வேண்டும். அதேபோல் என் கட்டுரை நான், பிரமிள், விசிறி சாமியார்..தொடர்ந்து எழுதி முடிக்க வேண்டும். எனக்குப்பிடித்த கவிதை, எனக்குப்பிடித்த கதை எல்லாவற்றையும் கொண்டு வரவேண்டும். முக்கியமாக நீங்கள் எழுதுவதையும் நான் பிரசுரிக்க வேண்டும். மெதுவாக நவீன விருட்சம் 84வது இதழை எல்லாருக்கும் அனுப்பிவிட்டேன். இன்னும் சிலருக்கு விட்டுப் போயிருக்கும். அவர்கள் விபரங்கள் தெரிந்தால் அதையும் அனுப்பி விடலாம். இன்று புதியதாய் வருபவர்கள் பிரமாதமாய் எழுதித் தள்ளி விடுகிறார்கள். நான் நடத்திய கூட்டத்தில் blogல் எழுதும் நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தது மகிழ்ச்சியான விஷயமாக எனக்குத் தோன்றியது.

திரும்பவும் தினம் தினம் சந்திக்க முயற்சி செய்யலாம்.

அன்புடன்

அழகியசிங்கர்

Comments

வாருங்கள் ... காத்திருக்கிறேன்
உங்கள் உழைப்பும், ஆர்வமும் எங்களுக்கு உந்துசக்தி. காத்திருக்கிறோம்