Skip to main content

போலிப் பா(ர்)வை


(இதோ ஒரு சிலேடைக் கவிதை. இதில் வேசியையும், கண்ணாடியையும் சிலேடைப் பொருளாக்கி எழுதியிருக்கிறேன். படம் ஒரு பெண் கண்ணாடி அருகில் இருப்பது போல இருந்தால் நலம். இன்றேல் எது பொருத்தமோ அதை இடுங்கள்.)


யாருமற்ற வெளியில்


உன்னைக் கடந்தபோது


ஒரு வினாடி


என்னை பூசிக்கொண்ட


போலி நீ.


என்னை


உள்ளிறக்கிக் கொள்வது போல்


பாசாங்கு காட்டுகிறாய்.



நான்


தள்ளிப்


போனதும்


அடுத்த


பிம்பத்திற்குத்


தயாராய் நீ!

Comments